TIRUVANNAMALAI

SRI DHANDAPANI          ASHRAMAM

230 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட ஆஸ்ரமம்

அன்பே சிவம்! சிவமே சகலமும் !!

அன்பிற்கினிய ஆன்மிக அன்பர்களே, வணக்கம்.
    
 
2022 மார்ச் மாதம் 21 ம் தேதி அன்று ஸ்ரீ ராகு பகவான் மேஷ ராசிக்கும், ஸ்ரீ கேதுபகவான்  துலாம் ராசிக்கும்  செல்கிறார்கள். இவ்விரு கிரக மாற்றங்களால்  12 ராசிகளுக்கும்  கிடைக்கப்போகும் பொதுப்பலன்களை பார்ப்போம். பலன்கள் எப்படி இருந்தாலும் இறைவழிபாடுடன் கிரக வழிபாடு மிக அவசியம். விரும்பினால்  மஹாயாக பூஜையில் கலந்து கொள்ளுங்கள்...













எதிலும் பொருமை, நிதானம், நாவடக்கம் தேவை. நாவை

அடக்காவிட்டால் குடும்ப பிரச்சனை முதல் அனைத்து விஷயங்களிலும்
பிரச்சனைகள் ஏற்படும். முக்கியமாக பெண்களுக்கு மாங்கல்ய

ஸ்தானத்தில் ராகு இருப்பதால் கணவன் - மனைவி கருத்து
வேறுபாடு ஏற்படும். கணவனின் உடல் நலம் குன்றும். குடும்பத்தில்

குழப்பம், மாமனார் மாமியாருடன் சதாசண்டை ஏற்படலாம். சிலருக்கு

தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கூட தோன்றலாம்...

இதிலிருந்து விடுபட அவசியம் இறைவழிபாடு தொடர்ச்சியாக

தேவை. எல்லோரிடம் அனுசரித்து போங்கள்... முடியாவிட்டால்

அமைதியாக இருங்கள். எதுவும் நிரந்தரம் இல்லை... என்ற

மனப்பக்குவத்தை உருவாக்கி கொள்ளுங்கள்...

மீன ராசி  அன்பர்களே, ஸ்ரீ ராகு பகவான் உங்கள்

ராசிக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2-ஆம் இடத்திற்கும்,

ஸ்ரீ கேது பகவான் அஷ்டம ஸ்தானம் எனும் 8-ஆம்

இடத்திற்கும் வருகிறார்கள். இவை நன்மை தீமை 

இருபலன்களை தருவதாக அமைந்துள்ளது.

கன்னி ராசி அன்பர்களே, ஸ்ரீ ராகு பகவான் உங்கள்

ராசிக்கு அஷ்டம ஸ்தானம் எனும் 8-லும், ஸ்ரீ கேது

பகவான் குடும்ப ஸ்தானம் எனும் 2-ஆம் இடத்திற்கும்

வருவது தீயபலன்களை தரும். முக்கியமாக

பெண்களுக்கு அதிக தீயபலன்களை தரும்.

தனுசு ராசி அன்பர்களே, ராகு பகவான் தங்களின்

ராசிக்கு 5-ஆம் இடத்திற்கும், கேது பகவான் 11-ஆம்

இடத்திற்கும் வருகிறார்கள். இந்த சஞ்சாரமானது

நன்மை தீமை கலந்த சம பலன்களையே தங்களுக்கு

தரும்.  எனினும் இன்னும் தாங்கள் ஏழரை ஆண்டு

சனிபகவானின் பிடியில் இருப்பதை மறவாதீர்.

2022 - 2023

கடன் அடைபடும்,நோய்கள் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியம்

மேம்படும்.  தொழிலில் வெற்றி, காதலில் வெற்றி, திருமண யோகம்,

புதிய வேலைவாய்ப்பு, கல்வியில் மேன்மை, திடீர் அதிர்ஷ்டம்,

பாட்டனார் சொத்து, பெரியோர்களின் ஆசி கிடைக்கும். வெளிநாட்டு

வியாபாரம், பயணம் கைகூடும். இருப்பினும் தங்களை ஏமாற்ற

ஒரு சிலர் முயற்சிப்பார்கள். கவனத்துடன் இருந்தால் ஏமாற்றத்தை

தவிர்க்கலாம். சிலருக்கு தூக்கமின்மை, கனவு தொல்லை இருக்கும்.

துலாம் ராசி அன்பர்களே, ராகு பகவான் உங்களின்

ராசிக்கு 7-ஆம் இடமான கணவன் - மனைவி

ஸ்தானத்திற்கும், கேது பகவான்  ஜென்ம ராசிக்கும்
வருகிறார்கள். இக்கிரக பெயர்ச்சியானது
சுருக்கமாக சொன்னால்
மிக மேசமான பலன்களை
தங்களுக்கு தர உள்ளது.

மகர ராசி அன்பர்களே, ராகு பகவான் உங்களின்

ராசிக்கு 4-ஆம் இடமான உயர்கல்வி, வீடு வாகனத்தை

குறிக்க கூடிய சுகஸ்தானத்திற்கும், கேது பகவான்

10-ஆம் இடமான தொழில் ஸ்தானத்திற்கும்

வருகிறார்கள். சுருக்கமாக சொன்னால் இவை

படுமோசமான பலன்களை தர உள்ளது.

புத்திர ஸ்தானத்தில் இருக்கும் ராகு பகவானால் குழந்தைகள் வகையில்

செலவுகள், பிரச்சனைகள் ஏற்படும்.  உடலில், மனதில் சோர்வு, டென்ஷன் பொன்றவையுடன் பணத்தட்டுப்பாடு, தொழிலில் மந்தம் என பல

வகையில் மந்த நிலை இருக்கும்.  தாய் மாமன் வகையில் பிரச்சனை,

காதலில் தோல்வி, மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை,

பெண்களுக்கு கற்ப பையில் பிரச்சனை, புத்திர தடை ஏற்படும்.

இருப்பினும் தீர்த்த யாத்திரை செல்லுதல், தெய்வ தரிசனம் போன்ற

நற்பலன்களும் கிடைக்கும்.

மிதுன ராசி அன்பர்களே, ஸ்ரீ ராகு பகவான் உங்கள்

ராசிக்கு லாப ஸ்தானம் எனும் 11-லும், ஸ்ரீ கேது

பகவான் புத்திர ஸ்தானம் எனும் 5-ஆம் இடத்திற்கும்

வருவது மிகச்சிறப்பான பலன்களை தரும்.

இதுவரை இருந்த இன்னல்கள் நீங்கும்.

சிம்ம ராசி அன்பர்களே, ஸ்ரீ ராகு பகவான் உங்கள்

ராசிக்கு பாக்கிய ஸ்தானம் எனும் 9-லும்,

ஸ்ரீ கேது பகவான் தைரிய வீரிய ஸ்தானம் எனும்

3-ஆம் இடத்திற்கும் வருவது  நற்பலன்களை

தரும். 

தைரியத்தாலும் அயராத முயற்சியினாலும் பல அரிய காரியங்களில்

வெற்றி பெறுவீர். தொழிலில் வெற்றி, புதிய தொழில், வேலை வாய்ப்பு, அதிகாரிகளின் ஆதரவு, விரும்பும் இடத்திற்கு இடமாற்றம்,

சம்பள உயர்வு, வேலை ஆட்களினால் நன்மை, அரசியலில் வெற்றி,

புதிய பதவி, அரசாங்கத்தால் ஆதாயம் செல்வ சேர்க்கை, வீடு வாகன

சேர்க்கை போன்ற பல நற்பலன்கள் கிடைக்கும். இருப்பினும்

இளைய சகோதரரால் பிரச்சனையும், தந்தைக்கு உடல்நிலை

பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.  மாணவர்களுக்கு கல்வியில் நல்ல

முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு கணவன் மற்றும் புகுந்த

வீட்டாருடன் நல்ல உறவு மேம்படும்.

ராசி பலன்களை தொகுத்தவர் :

"ஜோதிட ரத்னா" "செளமியன்"
சித்தர் மகன்.
Dr.
L. சீனிவாசன்
செயலாளர்
ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை,
திருவண்ணாமலை.

முக்கியமாக தொழிலில் தடை, வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை,

அதிகபடியான உழைப்பு, உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காதது,

உடல் மற்றும் மன சோர்வு, தூக்கமிண்மை, வீடு வாகனத்தல் செலவு

ஏற்படும்.  அரசியலில் உள்ளவர்களுக்கு பின்னடைவு ஏற்படும்.

பெண்களுக்கு கற்பப்பை பிரச்சனை, மாமனார் மாமியாருடன்

பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்களை பொருத்தவரை

கல்வியில் மந்தநிலை இருக்கும். கடினமாக உழைத்தால் மட்டுமே

தேர்வில் வெற்றி பெற முடியும். கண்டக சனிபகாவானின் பார்வையில்

நீங்கள் இருப்பதை மறவாதீர்... எனவே எதிலும் கவனம் தேவை.

தாயாரின் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை

மேஷ ராசி அன்பர்களே, ஸ்ரீ ராகு பகவான் உங்கள்

ஜென்ம ராசிக்கும், ஸ்ரீ கேது பகவான் ஏழாம் இடமான

கணவன்- மனைவி ஸ்தானத்திற்கும் வருகிறார்கள்.

சுருக்கமாக சொன்னால் இவ்விருவரின் சஞ்சாரமும்

தங்களுக்கு தீமை தருவதாகவே அமைந்துள்ளது.

ஏற்கனவே ஏழரை ஆண்டு சனிபகவானின் ஜென்ம சனி காலத்தில்

இருக்கும் தங்களுக்கு பலன்களை சொல்லித்தான் தெரியவேண்டுமா.?
பலன்களை சொல்லுவதற்கு எனக்கே சோர்வாக இருக்கிறது.

அனைத்திலும் சோதனை மேல் சோதனை வரும். வீடு வாகனம்

கைவிட்டு போகலாம். மாணவர்களுக்கு கல்வியில் தடை, தோல்வி

ஏற்படும். இளம் பெண்கள் காதல் வயப்படமல் இருந்தால்

மானம் மிச்சமாகும். இருப்பினும் தெய்வ நம்பிக்கையும், எதிலும்

பொருமையும் இருப்பின்  இச்சோதனைகளை எல்லாம் கடந்து

வருவீர்கள். பயம் வேண்டாம்.

ராகு ஜென்ம ராசியிலேயே வருவதால் மன சஞ்சலத்தை தருவார்.

யோசிக்கும் திறனை மட்டுப்படுத்துவார். ஆசைகளைத் தூண்டி

தவறான பழக்கத்திற்கு ஆளாக்குவார். சில உடல் பாதிப்புக்களைத்

தருவார். வாகனத்தினால் பாதிப்பும், செலவுகளையும் தருவார்.

கவனமாகச் செயல்படவும். வாக்கு தவறுதல், பகை ஏற்படும்.

கூட்டு தொழிலில் பிரச்சனை, கடன் ஏற்பட வாய்ப்புள்ளது.
திருமணத்தடை, கணவன்
- மனைவி பிரிவு மற்றும் சண்டை சச்சரவு,
 மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும். கல்வியில் தடை,

தீய நட்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஏற்கனவே தைரிய ஸ்தானத்தில் இருக்கும் சனிபகவான்

ராகு - கேது பகவான்களை ஊக்குவித்து பல வெற்றிகளை வாரி

வழங்க இருக்கிறார். முயற்சிகள் வெற்றி அடையும். பகைவர்கள்

காணாமல் போவார்கள். வழக்கில் வெற்றி, போட்டி பந்தயங்களில்

வெற்றி, தேர்வில் வெற்றி என வாழ்வில் பல வெற்றிகளை குவித்து

இலட்சியத்தை அடையும் நேரமிது. தொழில் சிறப்பாக இருக்கும்.

திருமணம், புத்திரம், உயர் கல்வி, வேலை வாய்ப்பு என பல

நற்பலன்களை பெறுவீர்கள்.  ஆணவத்தையும், தலைகணத்தையும்

மட்டும் தள்ளிவைத்தால் நெம்பர் -1 நீங்கள் தான்...

கடக ராசி அன்பர்களே, ஸ்ரீ ராகு பகவான் உங்கள்

ராசிக்கு தொழில் ஸ்தானம் எனும் 10-லும்,

ஸ்ரீ கேது பகவான் சுகஸ்தானம் எனும் 4-ஆம்

இடத்திற்கும் வருவது சாதகமற்ற சூழ்நிலை
இருக்கும்.
பல தடைகளையும்,  செலவுகளையும் தரும். 

ரிஷப ராசி அன்பர்களே, ஸ்ரீ ராகு பகவான் உங்கள்

வீட்டிற்கு 12-லும், ஸ்ரீ கேது பகவான் 6-ஆம் இடத்திற்கு

வருவது மிகச்சிறப்பான பலன்களை தரும்.

எதிலும் வெற்றிமேல் வெற்றி ஏற்படும். எதிரிகள்

தங்களிடம் தோல்வி அடைவார்கள், 

ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குரு சுக்ர சனீஸ்வராய ராகுவே கேதுவே நமஹ


விருச்சிக ராசி அன்பர்களே, ராகு பகவான் தங்களின்

ராசிக்கு 6-ஆம் இடத்திற்கும், கேது பகவான் 12-ஆம்

இடத்திற்கும் வருகிறார்கள்.  இவ்விரு கிரகங்களின்

சஞ்சாரமானது மிகவும் அற்புதமான பல நன்மைகளை

தரும் விதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

வாழ்வில் பல வெற்றிகளை குவிக்கும் நேரமிது.


ஏற்கனவே தாங்கள் அர்த்தாஷ்டம சனிபகவானின் பார்வையிலும்

இருப்பதால் மேலும் இன்னல்களை அதிகரிக்கும்.  தங்களின் கர்ம

பலன்களை அனுபவிக்கும் நேரமிது. இப்பிறப்பில் இதுவரை தாங்கள்

தீமை செய்திருந்தால் அவை வட்டியும் முதலுமாக தங்களுக்கே

வரும். குடும்பத்தில் குழப்பம், மன அமைதி இன்மை, கணவன் - மனைவி

பிரிவு, கூட்டு தொழிலில் நஷ்டம், கடன், நோய்நொடி, போன்றவை

ஏற்படும்.  திருமணத்தடை, காதலில் தோல்வி, கெட்ட பெயர், நல்லவர்கள்

மற்றும் பெரியோர்களின் சாபம், உறவினர்கள் மற்றும் நண்பர்களின்

துரோகம், வாகன கெண்டம், வழக்கில் தோல்வி, பூர்வீக சொத்து

இழப்பு என அனைத்து விதமான தீய பலன்களும் வர வாய்ப்புள்ளது.

கும்ப ராசி அன்பர்களே,  ராகு பகவான் உங்களின்

ராசிக்கு 3-ஆம் இடமான தைரிய ஸ்தானத்திற்கும்,

கேது பகவான் 9-ஆம் இடமான தெய்வ அருளைத்தரும்

பாக்கிய ஸ்தானத்திற்கும் வருவது மிகச்சிறப்பான

நற்பலன்களை தரும். 30 வயதுக்கு

மேற்பட்டவர்களுக்கு பொற்காலமாக அமையும்.

தொழிலில் வெற்றி, புதிய தொழில், வேலை வாய்ப்பு, அதிகாரிகளின்

ஆதரவு, விரும்பும் இடத்திற்கு இடமாற்றம், சம்பள உயர்வு,

வேலை ஆட்களினால் நன்மை, அரசியலில் வெற்றி, புதிய பதவி,

அரசாங்கத்தால் ஆதாயம், செல்வ சேர்க்கை, வீடு வாகன

சேர்க்கை போன்ற பல நற்பலன்கள் கிடைக்கும். முயற்சியினால்

பல அரிய காரியங்களில் வெற்றி பெறுவீர். தீர்த்த யாத்திரை செல்லுதல்,

தெய்வ தரிசனம் போன்ற நற்பலன்களும் கிடைக்கும். ஆன்மீகத்தால்

ஆன்மிக அன்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.  இருப்பினும் பூர்வீக

சொத்தில் பிரச்சனையும்,  சகோதரரால் பிரச்சனையும் இருக்கும்.,  

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்தநிலை நீங்கும்.

அஷ்ம சனிபகவானின் பாதிப்புகள் குறையும். தொழிலில் வெற்றி,

காதலில் வெற்றி, திருமண யோகம், வேலைவாய்ப்பு, உத்தியோகத்தில்

உயர்வு, சம்பள உயர்வு போன்றவை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு

மிகுந்த நன்மைகளை ராகு வாரிவழங்குவார். கல்வியில் மேன்மை,

திடீர் அதிர்ஷ்டம், பாட்டனார் சொத்து,  பெரியோர்களின் ஆசி கிடைக்கும். 

கடன் அடைபடும், நோய்கள் கட்டுக்குள் இருக்கும்.  இருப்பினும்

குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

எனினும் கவலை வேண்டாம் ஸ்ரீ சனி பகவானின் ஆதரவால்
தீமைகளை கடந்து வருவீர்கள்.  எதிலும் பொருமை, நிதானம்,

நாவடக்கம் தேவை. நாவை அடக்காவிட்டால் குடும்ப பிரச்சனை

 ஏற்படும். வீண் விவாதத்தை  தவிர்த்தால் தீமைகள் குறையும்.

அமைதிதான் உங்களுக்கு ஆறுதலை தரும். வாக்கு தவறுதல்,

தனப்பற்றாக்குறை, தொழிலில் மந்தம், கல்வியில் மந்தம்,

திருமண தடை என சாதகமற்ற பலன்களை பெறுவீர்கள். இருப்பினும்

சிலருக்கு வெளிநாட்டிலிருந்தோ, மாற்று மதத்தினரிடமிருந்தோ,

குறுக்கு வழியிலோ பெரும் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.